ஊரடங்குச் சட்டத்தை மீறிய 14 ஆயிரம் பேர் கைது
ஊரடங்கு சட்டத்தை மீறிய குற்றச்சாட்டின் கீழ் கடந்த 24 மணிநேரத்தில் 552 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
கடந்த 20ஆம் திகதி தொடக்கம் இன்று வரையான காலப்பகுதியில் பதினான்காயிரத்து 268 பேர் கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸ் ஊடகப்பிரிவு குறிப்பிட்டுள்ளது.
குறித்த காலப்பகுதியில் மூவாயிரத்து 563 வாகனங்களும் பறிமுதல் செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.